#BREAKING: செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு. 

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், தற்போது அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் நீர் தேங்கியிருந்ததால் விடுமுறை விட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். எனவே, நீர் தேங்கியிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment