#BREAKING: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

புதிய கட்சியை தொடங்கினார் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard colour) படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை அமைதியையும், நீலம் நிறம் சுதந்திரம், திறந்தவெளி, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரை உள்ள வரம்புகளையும் குறிக்கிறது என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், குலாம் நபி ஆசாத் ஆகஸ்ட் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment