#BREAKING: கேஸ் கிடங்கில் தீ விபத்து – உயிரிழப்பு 8-ஆக உயர்வு!

காஞ்சிபுரத்தில் கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்வு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தேவரியப்பாக்கத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம் அடைந்து சென்னை, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா தேவரியம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவாநந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரக்கடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிகரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த சமயத்தில் கடன் 28-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து கேஸ் குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment