#BREAKING : முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு…!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடைப்படையில்  மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி செல்வகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மணிகண்டன் அமைச்சராக இருந்த போது புகாரளித்த பெண்ணுடன் ஒன்றாக தங்கியிருந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.

புகாரளித்த பெண்ணை மிரட்டியுள்ளதாகவும், அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்சப் மூலம் அனுப்பி மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மணிகண்டன் அவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆதாரங்கள் இல்லாமலும், விசாரணையை முடிக்காமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த தீர்ப்பளிக்கயிருந்த நிலையில், தற்போது மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.