#BREAKING: மார்ச் 11 வரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சிறை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.

ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை நில அபகரிப்பு செய்யப்பட்ட மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 பிரிவில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட பிறகு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்க கூடாது என ஜெயக்குமார் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தான் என்னை கைது செய்துள்ளார்கள் என்று நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வாதாடினார். இதன்பின் ஜெயக்குமார் மீது கொள்ளை பிரிவும் சேர்க்கப்பட்டு, மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது  திமுக தொண்டரை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக ஜெயக்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 19 ஆம் தேதி சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்