#BREAKING: நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த மத்திய அரசு!

மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS), 2022 ஆம் கல்வி ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு (NEET PG EXAM 2022) வரும் மார்ச் 12 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. NBEMS இன் அதிகாரப்பூர்வ தளமான natboard.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, பிப்ரவரி 4, 2022 எனவும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 6 முதல் 8 வாரங்கள் வரை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Castro Murugan