#BREAKING: விவசாயிகள் போராட்டம் – உயர்மட்ட குழுவுடன் பிரதமர் ஆலோசனை.!

விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டவில்லை. மேலும், நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்