#BREAKING: விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு..!

டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு விவசாயிகள் செய்துள்ளனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் … Read more

#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து முன்பு பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அதிமுகவும் தற்போது வெளிநடப்பு செய்துள்ளது. முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவசர கோலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை … Read more

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் சக்கா ஜாம் போராட்டம் – விவசாயிகள் கைது.!

தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலை மறியல் போராட்டமாகும்.இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை … Read more

#BREAKING: விவசாயிகள் போராட்டம் – உயர்மட்ட குழுவுடன் பிரதமர் ஆலோசனை.!

விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டவில்லை. மேலும், நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர … Read more