#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்திய அதிகாரி வீட்டில் ரெய்டு…!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. 

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தற்போது ஈரோடு மாநகராட்சி ஆணையராக உள்ள சிவக்குமார்  செயல்பட்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment