#BREAKING: திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது.!

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு தற்போது கொரோனா உறுதி.

ஏற்கனவே, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டபோது, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, நெகட்டிவ் என வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை நடத்தபட்டது. அந்த சோதனை முடிவில் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், தன்னை  தனது வீட்டில் தங்கப்பாண்டியன்  தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுவரை தமிழகத்தில் 17 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan