#BREAKING: தமிழகத்தில் உயிரிழப்பு 5-லிருந்து 6 ஆக உயர்வு.!

தமிழகத்தில்  இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571-இல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் சிகிக்சை பெற்ற பெண் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் திருச்சிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan