#Breaking: தமிழகத்தை சூறையாடும் கொரோனா.! இன்று மேலும் 771 பேருக்கு பாதிப்பு.!

தமிழக்தில் இன்று மேலும் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் இதுவரை 4,829 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக்தில் இன்று மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 324 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது அங்கு பாதிப்பு 2,328 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

மேலும் இன்று ஒரே நாளில் 13,413 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 1,88,241 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 4,829 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது கொரோனா வார்டில் 3,275 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதையடுத்து இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 188 பேருக்கு கொரோன கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு 222 ஆக உயர்ந்தது. தொடர்ந்து கடலூரில் 95 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்