BREAKING:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.எனவே கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை  12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது.

 

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேரில் இருவருவர் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள்.ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan