BREAKING: உலகளவில் 30 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, சீனாவாக இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் சீனாவை விட தற்போது ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவிலும் அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207,118 ஆக உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக 882,772 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தனது முகத்தை அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் 987,322 பேரும், ஸ்பெயினில் 226,629 பேரும் , இத்தாலியில்  197,675  பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan