#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதில் 15,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,17,476 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 382 பேர் உயிரிழந்துள்ளனர்.