தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவிற்கு கொரோனா.!

தமிழகத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 21-வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan