#BREAKING: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார். அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 94.38% (4.27 லட்சம்), மாணவர்கள் 85.83% (3.94 லட்சம்) பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

மாணவர்களின் தேர்ச்சி விவரம் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் (97.22%) தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் கூறப்பட்டது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in ,https://dge.tn.gov.in, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment