#BREAKING: 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னையில் 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே தொடக்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். சுமார் 3.42 கோடி மதிப்பில் மொத்தம் 25 மின் வாகனங்கள் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காணொளி காட்சி மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதேபோல சில விருதுகளையும் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பசுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளையும் வழங்கவுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment