செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பிரியாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக மருத்துவ துறை திட்டமிட்டுள்ளது.