#BREAKING: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

இந்த சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகம் உள்ளே நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அலுவலகத்தில் என்னென்ன சேதமடைந்துள்ளது என ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, அதிமுக அலுவலகம் வன்முறை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நேற்று சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், 2வது முறை மீண்டும் அதிமுக அலுவலகம் சென்றுள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment