கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்தோற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
இதனால், நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
- அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (all bars), அனைத்து பெரிய அரங்குகள் (auditoriums), கூட்ட அரங்குகள்(meeting hall) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனுமதி இல்லை.
- பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க அனுமதி இல்லை.
- வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.
- சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Spas, Saloons, Barber shops) இயங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- கோல்ஃப், டென்னிஸ் கிளப் (club) உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் (sports training academy) செயல்பட அனுமதி இல்லை.
- தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.