#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே, அதிமுக பெயரையோ, சின்னத்தையோ ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment