#BREAKING: அதிமுக முன்னாள் எம் .பி குற்றவாளி என தீர்ப்பு..!

லஞ்சம் தந்து கடன் பெற்ற வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.பி கே .என் ராமச்சந்திரன் குற்றவாளி என எம்.பி ,  எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் எம்.பி ஆக கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே .என் ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி கே .என் ராமச்சந்திரன்  சென்ட்ரல்  பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து  எம்.பி கே .என் ராமச்சந்திரன் , அவரது மகன் ராஜசேகரன்  மற்றும் வங்கி மேலாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan