#Breaking: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்.!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சென்று சம்மன் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் விஜய்யிடம் விசாரித்த நிலையில், அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வருமான வரி சோதனை சுமார் 20 இடங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திடீரென நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சம்மன் அளித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்