#BREAKING: உருவானது புதிய காற்றழுத்த பகுதி.! தமிழகத்தில் கனமழை.! – வானிலை மையம் எச்சரிக்கை.!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12-ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 13-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 13-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு 15 முதல் 20 செ.மீ வரை மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய கணிப்பின்படி, புயலாக உருவாக வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். தமிழக்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment