#BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை..இன்று 9 மாவட்டங்களில் – வானிலை மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை என தகவல்.

தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. இதுபோன்று, நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சியில் கனமழை பெய்யக்கூடும். மேலும், ஜூலை 28, 29ல் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment