#BREAKING: தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல், 243 பேருக்கு டெங்கு – அமைச்சர்

தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா என்ற HIN1 காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். HIN1 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அரசு மருத்துவமனையிலும், 215 பேருக்கு தனியா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் பதற்றமடையும் சூழல் இல்லை, குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை. எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் என கூறினார்.

மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் காய்ச்சல் மாத்திரைகளை வாங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும், தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது என தெரிவித்த அமைச்சர், காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment