#BREAKING: இலங்கை சிறையிலிருந்து 19 பேர் விடுதலை! – நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை.

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்