#Breaking : தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடியில் கொரோனா தொற்று காரணமாக பார்த்திபன் எனும் 55வயது நபர் உயிரிழந்தார். 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

காரைக்கால் பெண் :

நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி ஆண் :

தற்போது இன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் எனும் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment