“தலையெழுத்தை தலைகீழாக நிச்சயம் மாற்றும் திருத்தலம்” -தரிசிக்க நீங்க ரெடியா..?

  • தலையெழுத்தை மாற்றும் தலம் பற்றிய ஆன்மீக தகவலை அறிய உள்ளோம்.
  • இந்த திருதலத்திற்கு சென்றால் நிச்சயம் தலையெழுத்து மாறும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாகவே இருந்து வருகிறது.

உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் படைக்கப் படுகிறார்கள் அவர்களை படைப்பது பிரம்ம என்றே வேதம் கூறுகிறது.அப்படி எல்லோருடைய தலையெழுத்தையும் எழுதுபவரும் பிரம்ம தான் எல்லோரும் கூறுகின்ற ஒரே வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா.?என்ன செய்வது எல்லாம் தலையெழுத்து நம்ம கையில் என்ன உள்ளது…?என்று விரக்கிதியின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்க்கையை விமர்சிப்பார்கள்.

Image result for பிரம்ம

அவ்வாறு தலையெழுத்தை நினைத்து கவலை கொள்வருக்கு தங்களது கவலையை போக்கும் விதமாக பிரம்மாவே ஒரு வழியையும் காண்பித்து இருக்கிறார். இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே பிரம்மவிற்கு கோவில் உண்டு இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் சரஸ்வதி சமேதராக வீற்றிருந்து அருள் புரிகிறார்.

அப்படி வட மாநிலத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புஷ்கரம் பிரம்மா கோவில் ஆகும்.இதற்கு அடுத்தாற்போல் எங்கு உள்ளது என்றால் அது தமிழகத்தில் தான் தமிழத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் உள்ள சிகண்டீஸ்வரர் திருக்கோவில்.

இந்த இரண்டு தலங்களிலும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் பிரம்மாவயையும் , சரஸ்வதியையும் வழிபட்டால் எப்பேற்பட்ட தலையெழுத்தையும் மாற்றி அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பவராக காட்சியளிக்கிறார்.இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தவர்கள் அனைவருக்கும் நிச்சயம் அவர்களின் தலையெழுத்து மாறி புதிய ஒரு வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பார்கள் என்பது இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கை ஆக இருந்து வருகிறது.

 

author avatar
kavitha