போதையில் மதுரை ரயிலை தனது பைக்கால் நிறுத்திய வாலிபர்!

மதுரையிலி இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலை தண்டவாளத்தில் பைக்கை குறுக்கே நிறுத்தி ரயிலை மறித்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று காலை பயணிகள் ரயில் மதுரையிலிலுருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சிலைமானை அடுத்த மேம்பாலத்தை தண்டி சென்றபோது, ஒரு போதை வாலிபர் தனது இருசக்கர வாகனத்தால் தண்டவாளத்தை கடக்க நினைக்கையில் இடையில் மாட்டிக்கொண்டார்.

இதனை கவனித்த இன்ஜின் ட்ரைவர் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியருடன் சேர்ந்து வாகனத்தை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிறகு ரயில்வே போலிஸிற்கு தகவல் தெறிவிக்கப்பட்டவுடன், அந்த போதை வாலிபர் அங்கிருந்து தப்பித்து விட்டார்.

பிறகு போலீசார் விசாரித்ததில் மானாமதுரை செங்கோட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பது தெரிய வந்தது. பிறகு அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment