நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை 12 மணி வரையும், மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan