நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!

நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போஸ்டர் டோஸ் போடப்படவுள்ள நிலையில், தனியார் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து சுகாதார துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39  வாரம் கடந்தவர்கள் போஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள். முதல் 2 தவணைகளில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதுவே பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட வேண்டும். தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக அதிகபட்சம் ரூ.150 மட்டுமே வசூலிக்கப்பட்ட வேண்டும். தடுப்பூசி மருந்தின் விலையை தவிர்த்து சேவை கட்டணம் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.