மும்பையில் எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.!

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதி ஒன்றுக்கு நேற்று இரவு வெடிகுண்டு வைக்கப்படுவது குறித்து காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்  விடுதியில் தங்கியிருந்த 150 பேரை வெளியேற்றினர். இதனையடுத்து, வெடிகுண்டு இருப்பதை கண்டறிய மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் இன்று காலை விடுதியில் விரிவான சோதனை நடத்தினர். ஆனால், சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.