உதயநிதி ஸ்டாலின் உட்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு..!

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டி.கே. எஸ். இளங்கோவன் உட்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan