காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு! ஒருவர் பலி!

இன்று 7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்  4 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் விழிப்புடன் இருக்கின்றனர்.

அப்படி இருந்தும் பெங்களூருவில்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்னா வீட்டின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலி ஆகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்  தீவிர விசாரணை நடத்தி வருகிறது.குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment