திண்டுக்கல் அருகே பயங்கரம் ! இன்று அதிகாலை நடந்த விபத்து …

பேப்பர் ஆலையில் தீவிபத்து .திண்டுக்கல்லில்   பரபரப்பு . 
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பேப்பர் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆலை முற்றிலுமாக எரிந்து நாசமானது. விட்டநாயக்கன்பட்டியில் உள்ள தனியார்  பேப்பர் மில்லில் அதிகாலையில் பிடித்த தீ கன நேரத்தில் ஆலை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் யாரும் பாதிக்கப்படவில்லை.
Related image
 ஆலையில் இருந்த பேப்பர் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் நாசமாயின. வேடச்சந்தூர், திண்டுக்கல் உட்பட 4 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தில் ரூ.25 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தி விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுதியுள்ளது.   

author avatar
Dinasuvadu desk

Leave a Comment