பலத்த மழை காரணமாக சீனாவில் வெள்ளம்!!

ஆசிய நாடான சீனாவில், ஜிலின் மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன; ஒரு லட்சத்து, 10 ஆயிரம் பேர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்தும் முடங்கி உள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 18 பேர் உயிரிழந்து உள்ளனர்; ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

author avatar
Castro Murugan

Leave a Comment