பணக்காரர்கள் ஏழைகள் இடையிலான இடைவெளி குறைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம்

டெல்லி:உலக அளவில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகள் அதை சரி செய்ய முடியாத நிலை குறித்து  நியூ ஆக்ஸ்பாம் என்ற நிறுவனம்  ஆய்வு நடத்தியது. 152 நாடுகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆகிய 3 பிரிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே மற்றும் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மூன்று பிரிவுகளிலும் இந்த நாடுகள் வலுவான முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 152 நாடுகளில் இந்தியா 132 வது பிடித்துள்ளது.
ஒரு நாட்டின் சுகாதார மற்றும் கல்வி செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகள் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டு உள்ளது.
சமூக செலவினங்களில் இந்தியாவிற்கு 152 வது இடம் கிடைத்து உள்ளது. முற்போக்கு வரி விதிப்பில் 91 வது இடமும்,  தொழிலாளர்கள் உரிமைகள் முக்கியத்தில் 86 வது இடமும் கொடுக்கப்பட்டு உள்ளது. சுகாதார செலவினம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என இந்தியா குறித்து இந்த அறிக்கை கூறுகிறது.
வரி அமைப்பை பொறுத்த வரை ஆவணங்களில் முற்போக்கானதாக இருந்தாலும், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.
தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்குவது இந்தியாவில் மோசமாக உள்ளது.
இந்தியாவில் நிலவி வரும் கட்டுப்பாடான தொழிலாளர் கொள்கைகளை, அங்கு உழைக்கும் உற்பத்தி துறைக்கு தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்று என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment