டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மாநிலங்களவையில் தமிழக எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதியிக்கு வந்து கோஷம் எழுப்பினர். நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.