சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராக தொண்டர்கள் அவர்களுடைய உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.அதிமுகவிற்கும், சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது. டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை எந்தஒரு தொண்டராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது, அவர்களை நீக்கவேண்டும் என்றனர். இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது.