தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.அதில், தங்களின் ஆதரவை முதல்வர் பழனிசாமி இழந்துவிட்டார். அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை உடனடியாக கூட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.