கதிராமங்கலம், நெடுவாசலில் 170 நாட்களாக போராட்டம் தொடர்கிறது…!

திருவிடைமருதூர்: கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அங்குள்ள அய்யனார் கோயில் திடலில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்புகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின்போது கதிராமங்கலம் மண்ணை பாதுகாக்க துர்க்கை அம்மன் கோயிலில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று 132வது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யக்கோரி புதுகை மாவட்டம், நெடுவாசலில் இன்று 170வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நீடிக்கிறது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment