இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை  310-ஆக உயர்வு

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.

இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தான் காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசு தகவல் அளித்துள்ளது.

 

 

Leave a Comment