“பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்” – எல்.முருகன்!

பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பழனிசாமியை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.