5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும்- அண்ணாமலை..!

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பிறகு பலர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். பின்னர், அவருக்கு பாஜகவில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை பெயரில் ட்வீட் ஒன்று வெளியானது. பின்னர், அது போலியான கணக்கு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சூர்யாவிற்கு எதிராக நான் பதிவிட்டது போல கருத்து பதிவிட்ட போலிக் கணக்கை முடக்கிவிட்டோம்.  மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் அமரும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். 2021 தேர்தலில் பாஜக வலுவோடு காலுன்றி நிற்கக்கூடிய கட்சியாக இருக்கும் என தெரிவித்தார்.

author avatar
murugan