அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தபோது மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கும்போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 150 பேர் மீது கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக செயல்படுதல், ஆயுதங்கள், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது.
இதுபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 50 பேர் மீதும், விசிக நிர்வாகிகள் 30 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், மோதலில் ஈடுபட்டது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக, விசிக மீது தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…