58 வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பிஜேடி எம்எல்ஏ…!

ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹான்கார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 

ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹன்கார்  நீண்ட காலமாக  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டுமென்று என்ற கனவில் இருந்த நிலையில் தற்போது அவரது கனவு நிறைவேறி உள்ளது.

 வெள்ளிக்கிழமை நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன்  அங்கதாவும்கலந்து கொண்டு தேர்வு எழுதினார். கந்தமால் மாவட்டத்தில் பிதாபரி கிராமத்தில் உள்ள ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பல குடும்பப் பிரச்சினைகள் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 1980களில் எனது படிப்பு நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக எனது வயது உடையவர்கள், என்னை விட வயதானவர்கள் கடினமாக உழைத்து படிப்பை முடித்தவர்கள் பற்றிய கதைகளை கேள்விப்பட்டேன். எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை தேர்வு எழுதினால் ஊக்கப்படுத்தினர். தற்போது எனது கனவு நனவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.