பீகாரில் 2ம்கட்ட தேர்தல் இன்று..களத்தில் முதல்வர்-முதல்வர் வேட்பாளர் நேருக்கு நேர்

 பீகாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெறுகிறது. முக்கிய தலைவர்கள் இன்று களத்தில் உள்ளனர்.

பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைய உள்ளதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி  பிரசாரத்தினை  கட்சிகள்  நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.

இந்நிலையில் 2ம்கட்ட தேர்தல் 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 94 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தேஜெஷ்வி யாதவ் மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய முக்கிய தலைவர்கள் களம் காணுகின்றனர்.

author avatar
Kaliraj