biggboss 3: வழி மேல் விழி வைத்து காத்திருந்த சாண்டி! தந்தையை கட்டியணைத்த லாலா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 80 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், இந்த வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சாண்டி தனது குழந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் குழந்தையை நினைத்து கண் கலங்குவதும் உண்டு. இந்நிலையில், தனது குழந்தையை பார்ப்பதற்காக ஏங்கி கொண்டிருந்த சாண்டியை பார்ப்பதற்காக, சாண்டியின் மகளான லாலா மற்றும் அவரது மனைவி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். சாண்டி தனது குழந்தையை கட்டியணைத்து அழுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.